::படித்ததில் பாதித்தவை::
படித்ததில் பாதித்தவை 1:
‘கவனமாகக் காலை வையுங்கள். கண்ணி வெடிகள் இருக்கலாம்’
என்ற வாசகம் ஈழ மக்கள் வாழ்க்கையில் இயல்பானது.
‘பாதங்களைப் பார்த்து வையுங்கள்… பிணங்கள் தட்டுப்படலாம்’
என்பதுதான் இன்றைய யதார்த்தம். பிணங்கள் பார்த்துப் பழகிய மனங்கள் இப்போது அழுவதில்லை. ‘கொடுத்துவைத்தவர்கள், சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்’ என்பது ஆறுதல்!
படித்ததில் பாதித்தவை 2:
எல்லா ஊருக்கும் எருமையில் வரும் எமன்,
ஈழத்தில் மட்டும் ஏரோபிளேன் ஏறி வந்து குண்டுகள் வீசுகிறான்.
படித்ததில் பாதித்தவை 3:
பால் வளம் இழந்த மார்பின் காரணம் அறியுமா குழந்தை? சபேசன் சிந்து, சிவராசா சக்தி கணேசன் ஆகிய இரண்டு குழந்தைகள் பெயர் வரலாற்றில் இடம் பெறும். அம்மையிடம் பால் இல்லாமல் செத்த பிள்ளைகள்.
இனி, உலகில் வறுமைக்கு சோமாலியாவைச் சொல்ல வேண்டியதில்லை.
நமது சொந்தங்களே இருக்கிறார்கள்.
~ இலங்கை நிலவரம் பற்றி விகடன்

exellant……..but its true…..
udamai elanthom uravai elanthom UNARVAI ELaKALAMA? valikirathu ethayam… kanneruku bathil rattham tulirkirathu.. savai vida kodithu aduthavarain maranam athaninum kodithu unarvin kolai… vaalnthum pinangalage naam… eranthum theivangalage avargal… athma shayiyadaiya vendugiren…