என்று தனியும் இந்த சுதந்திர தாகம்?

இன்று, நவம்பர் 26, மாவீரர் நாள்.
1954ல், இதே தினத்தில், என் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாள்.
தம்பி என்று அழைக்கப்படும் இந்த அண்ணனை ஒவ்வொரு ஈழ புலியும் தரிசிக்கும் நாள்.
36 வருடங்களாக தனி தமிழ் நாடு கேட்டு போராடி வரும் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவன் பிறந்த நாள்.
உரிமையையும்.. உடைமையையும்.. இழந்து வாடும்.. வாழும் ஒவ்வொரு தமிழனுக்குமான நாள்.

இன்றும் இந்த மாவீரன்…
இந்த உலகத்தை பார்த்து…
தனி தமிழ் ஈழம் வேண்டுமென்று…
இறைஞ்சி விண்ணப்பிக்க கூடும்…

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்?
என்று விடியும் எம் தமிழனின் வாழ்வு?

என் பாரதியை போல…
ஆடுவோமே பள்ளு பாடுவோமே…
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்…

என்று என் ஈழ தமிழனும் விரைவில் பாடவேண்டும்.

அந்த நாளை என் வாழ்வில் நான் கண்டு களிப்பேனா?

~பெ.வெ.
பி.கு: புகைபடம். நன்றி ஆர்த்தி இராசா.

~ by peeveeads on November 26, 2008.

One Response to “என்று தனியும் இந்த சுதந்திர தாகம்?”

  1. ஆடுவோமே பள்ளு பாடுவோமே…
    ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்…
    என்று என் ஈழ தமிழனும் விரைவில் பாடவேண்டும்

Leave a Reply