நான்காவது தூண்?
சென்னை மாநகரின் இதய பகுதியில் உள்ளது சென்னை உயர் நீதிமன்ற வளாகம். அதை ஒட்டியுள்ளது… நாளைய நான்காவது தூண்களை உருவாக்கும் டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரி. தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படும் இக்கல்லூரிக்கு எப்பொழுதும் போலவே இப்பொழுதும் போறாத காலம். 117 ஆண்டு கால வரலாறு கொண்ட இந்தியாவின் பழமையான இக்கல்லூரி உருவாக்கிய சட்ட வல்லுனர்கள் எத்தனை எத்தனை ஆயிரம். ஆனால்…
இப்பொழுது நடப்பது என்ன.. நடந்தது… என்ன?
ஒரு தேர்வு தினத்தில்…. மாணவர்களிடையே கோஷ்டி மோதல். சாதி வெறி அடங்காத மாணவர்களுக்குள் பிரச்சனை. ஒருவன் கையில் கத்தி. இன்னொருவன் கையில் உருட்டுக்கட்டை. வேறொருவன் பேருந்தை கொளுத்துகிறான். மற்றொருவன் தரையில் இரத்த வெள்ளத்தில்…. இவர்கள் நாளைய இந்தியாவின் நான்காவது தூண்கள். ஆம்… நான்காவது தூண்கள் நடு தெருவில் பொறுக்கித்தனம் செய்துகொண்டு.
என்ன செய்யவில்லை… செய்ய வேண்டும்…?
சட்ட கல்லூரிக்குள் சட்டம் தன் கடமையயை செய்யவில்லை. நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்திருக்கிறது அரசு. அடி உதை வாங்கிய மாணவர்கள் ஆஸ்பத்திரியிலும்…. அடி உதை கொடுத்தவர்கள் பத்திரமாக கம்பிக்கு பின்னாலும் இருப்பது போதாது. இவர்களின் சட்ட கல்லூரி சீட்டுக்கள் கிழிக்கப்பட வேண்டும். மற்ற எல்லா கல்லூரிகளிளும் சீட்டு மறுக்கப்பட வேண்டும்.
படிக்காமல்.. வேலை இல்லாமல் தெருவில் பரதேசிகளாக அலைந்தாலும் பரவாயில்லை… நாளைய.. என் சமுதாயத்திற்கு.. இவர்கள் சட்டம் இயற்றத் தேவையில்லை.
அதை டாக்டர் அம்பேத்கர் கூட மன்னிக்க மாட்டார்.
மற்றவை… உங்களுக்காக… எழுதுங்கள்.
~பெ.வெ.

Well Said !!!
The real truth behind the police silence should be revealed. All students connected to this incident should be life sentenced. It should be a lesson to all porukki students.