மாவீரர் தினம். மறுபடியும் பிரபாகரன்!

•May 26, 2009 • 5 Comments

மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! – இது விகடன் விதைத்துள்ள நம்பிக்கை!

பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், “அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!” என உறுதியாகச் சொல்கிறார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!
“முப்பது வருடப் போராட்ட காலத்தில் ‘அடுத்து என்ன நடக்கும்?’ என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம் பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..!

அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத் துறை தளபதிகளையும் கலந்து ஆலோசித்த தலைவர், ‘நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பாரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப் பது கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம். அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!’ என்று சொல்லி இருக்கிறார்.

அதன்படி கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சிகுடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப் பிரிவுகள் ஊடுருவியிருக்கின்றன. இப்போது என்றைக்குமே இல்லாத பாரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார்.

கடைசி வரை களத்தில் நின்ற ‘கரிகாலன்’!
மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப்போனார்கள்.

ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை சர்வபத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறினார்.

சார்லஸ் என்ற குலக் கொழுந்து!
தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளிவாய்க்காலில் தங்கவைத்திருந்தார்.

முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசிநேர நெருக்கடிகள் மிகுதியான போது புலித் தளபதிகள் மக்களிடம், ‘நீங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய்விடுங்கள். ரசாயன குண்டு களை வீசி மொத்தமாக அழிக்கப்போகிறார்கள்!’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், ‘மண்ணோடு மண்ணானாலும் நாங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குப் போகமாட்டோம்’ என்று உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள். இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்துபோனார்கள்.

கடைசி நாளில்…
அடுத்தபடியாக மக்கள் மீது ராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட… அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!” என்று நிறுத் தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத் தொடங்கினார்கள்.

“மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை. அதனால் தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன்.

அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் ராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்’ என்று ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார்.

தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

சித்திரவதைக்குள்ளான நடேசன்
அவர்களும் ராஜபக்ஷேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர் சிங்கள ராணுவத்தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடி பிடித்தபடி போயிருக்கிறார்கள்.

ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த ராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். நடேசனை கொடூரமாக சித்ரவதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை.

அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக் கொன்ற ராணுவத்தினர், காயம்பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிக மான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில் தப்பித்திருக்க வாய்ப்பில்லை.

அந்த உடல்…
ஈழத்தையே முழுவதுமாக அழித்த ராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தலைவரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது.

அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின் உருவத்தை ஜோடித்திருக்கிறது ராணுவம். தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல், பெல்ட் எப்படிப்பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத்திருந்தது போல ராணுவம் காட்டுகிறது.

மாவீரர் தினத்தில்… வருவார் இந்த மாவீரன்!!

ராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27-ம் தேதி ‘வீரவணக்க’ தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்!

காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலைவருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்!” என்கிறார்கள் உறுதி குறையாமல்.

PrabhakaranOfEelamIsAlive-News

•May 20, 2009 • 2 Comments

Watch this News…. and you will Understand, How Srilankan Government and Indian Media are trying to cheat the people of World. The objective of SLA is to divert the attention of International Bodies from Civilians being killed by SLA just by spreading this FALSE Prabhakaran’s death news.

If you don’t understand TAMIL, here is the Jist.
The body shown is not prabhakaran’s cos of the following reasons.
1. He doesn’t have big eyebrows, but the dead body has two big.
2. Prabhakaran is already 54 and the dead body looks like 40 years, with soft clean shaven skin.
2. If his body was taken from water only yesterday morning, how can they do a DNA test in 3 hrs, which generally takes 3-4 days
3. Day 1 SLA said, they killed the Tamil leader, when he was fleeing in an ambulance, but now, they are taken this body from deep waters.

Anyways…. He will show BACK that he is ALIVE.

::படித்ததில் பாதித்தவை::

•March 20, 2009 • 1 Comment

படித்ததில் பாதித்தவை 1:
‘கவனமாகக் காலை வையுங்கள். கண்ணி வெடிகள் இருக்கலாம்’
என்ற வாசகம் ஈழ மக்கள் வாழ்க்கையில் இயல்பானது.
‘பாதங்களைப் பார்த்து வையுங்கள்… பிணங்கள் தட்டுப்படலாம்’
என்பதுதான் இன்றைய யதார்த்தம். பிணங்கள் பார்த்துப் பழகிய மனங்கள் இப்போது அழுவதில்லை. ‘கொடுத்துவைத்தவர்கள், சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்’ என்பது ஆறுதல்!

படித்ததில் பாதித்தவை 2:
எல்லா ஊருக்கும் எருமையில் வரும் எமன்,
ஈழத்தில் மட்டும் ஏரோபிளேன் ஏறி வந்து குண்டுகள் வீசுகிறான்.

படித்ததில் பாதித்தவை 3:
பால் வளம் இழந்த மார்பின் காரணம் அறியுமா குழந்தை? சபேசன் சிந்து, சிவராசா சக்தி கணேசன் ஆகிய இரண்டு குழந்தைகள் பெயர் வரலாற்றில் இடம் பெறும். அம்மையிடம் பால் இல்லாமல் செத்த பிள்ளைகள்.
இனி, உலகில் வறுமைக்கு சோமாலியாவைச் சொல்ல வேண்டியதில்லை.
நமது சொந்தங்களே இருக்கிறார்கள்.

~ இலங்கை நிலவரம் பற்றி விகடன்

திருமா – தமிழ் ஈழம் அங்கீகார மாநாடு. முன்னுரை.

•December 23, 2008 • Leave a Comment

வரும் 26ம் தேதி… தமிழ் ஈழ்த்துக்கும்.. ஒவ்வொரு தனி ஈழ தமிழனுக்கும்… நல்ல நாளாக அமையலாம்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தலைவர் திருமா அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ள “தமிழ் ஈழம் அங்கீகார” மாநாட்டை எதிர் நோக்கி ஒவ்வொரு வீரத்தமிழனும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறான். தமிழகத்தில்.. குறிப்பாக சென்னையில் இப்போதுள்ள அரசியல் சூழலில்.. காங்கிரஸ் போன்ற கட்சிகள் திருமாவை கைது செய்ய சொல்லி வற்புறித்துவதால்.. மாநாடு சிறப்பாக நடப்பதில் உள்ள சிக்கல்கள் ஏராளம். தமிழக காவல் துறையும் இது போன்ற தருணத்தில் போதுமான பாதுகாப்பு.. மற்றும் ஆதரவு தராது என்பது வருத்தத்திற்கு உரிய விடயம்.

வரும் 26ம் நாள், நான் சென்னையில் இருக்கிறபடியால்.. இந்த மாநாட்டை முழுவதுமாக படமாக்கவே விரும்புகிறேன். பிரசினை ஏதும் இராது என்ற நம்பிக்கையுடன் களத்தில் இறங்கவே திட்டமிட்டுள்ளேன். அது நடந்தால்.. அந்த புகை படங்கள் உங்கள் பார்வைக்கும்.. இங்கே… வரும்.

காத்திருங்கள்… வாழ்த்தி அனுப்புங்கள்.

~பெ.வெ.

உண்ணாநிலை போராட்டம்…

•December 16, 2008 • Leave a Comment

சென்ற வாரம் வெள்ளி.. சனி.. ஞாயிறு… என தொடர்ந்து மூன்று நாட்கள், தகவல்தொடர்பு துறையில் பணி புரியும் நண்பர்கள் பலர்.. என் அருமை சகோதரன் ஈழ தமிழனின் நலம் பேண.. உண்ணாநிலை போராட்டம் செய்தனர்.

முதல் நாளில் பத்து.. இருபது என வந்த தோழர்கள்… கடைசி நாளில் 250 என கூட்டமாக சேர்ந்து போராட்டம் செய்ததாக நண்பர் லட்சுமணராசா தெரிவித்தார். வைகோ.. நெடுமாறன் அய்யா.. சுபவீ.. கல்யாணி… திருமா.. சீமான்.. தாமரை… என எல்லா தமிழ் ஆதரவாளர்களும் வந்து வாழ்த்தியதை பெருமிதத்துடன் சொன்ன போது, நான் தவற விட்ட வாய்ப்பை நினைத்து வருத்தபடுகிறேன்.

சில புகைபடங்கள் இங்கே… நன்றி: லட்சுமணராசா


மேலும் படங்கள்…

என் தமிழனுக்காக.. நானும் போராடுவேன். நண்பர்கள் விழைந்தால்… பெங்களூரில் அப்படி ஒரு உண்ணாநிலை அறப் போராட்டத்தை நடத்தவே…. பங்கு பெறவோ விரும்புகிறேன்.
நண்பா தயாரா?

~பெ.வெ.

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்?

•November 26, 2008 • 1 Comment

இன்று, நவம்பர் 26, மாவீரர் நாள்.
1954ல், இதே தினத்தில், என் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாள்.
தம்பி என்று அழைக்கப்படும் இந்த அண்ணனை ஒவ்வொரு ஈழ புலியும் தரிசிக்கும் நாள்.
36 வருடங்களாக தனி தமிழ் நாடு கேட்டு போராடி வரும் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவன் பிறந்த நாள்.
உரிமையையும்.. உடைமையையும்.. இழந்து வாடும்.. வாழும் ஒவ்வொரு தமிழனுக்குமான நாள்.

இன்றும் இந்த மாவீரன்…
இந்த உலகத்தை பார்த்து…
தனி தமிழ் ஈழம் வேண்டுமென்று…
இறைஞ்சி விண்ணப்பிக்க கூடும்…

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்?
என்று விடியும் எம் தமிழனின் வாழ்வு?

என் பாரதியை போல…
ஆடுவோமே பள்ளு பாடுவோமே…
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்…

என்று என் ஈழ தமிழனும் விரைவில் பாடவேண்டும்.

அந்த நாளை என் வாழ்வில் நான் கண்டு களிப்பேனா?

~பெ.வெ.
பி.கு: புகைபடம். நன்றி ஆர்த்தி இராசா.

நான்காவது தூண்?

•November 13, 2008 • 2 Comments

சென்னை மாநகரின் இதய பகுதியில் உள்ளது சென்னை உயர் நீதிமன்ற வளாகம். அதை ஒட்டியுள்ளது… நாளைய நான்காவது தூண்களை உருவாக்கும் டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரி. தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படும் இக்கல்லூரிக்கு எப்பொழுதும் போலவே இப்பொழுதும் போறாத காலம். 117 ஆண்டு கால வரலாறு கொண்ட இந்தியாவின் பழமையான இக்கல்லூரி உருவாக்கிய சட்ட வல்லுனர்கள் எத்தனை எத்தனை ஆயிரம். ஆனால்…

இப்பொழுது நடப்பது என்ன.. நடந்தது… என்ன?
ஒரு தேர்வு தினத்தில்…. மாணவர்களிடையே கோஷ்டி மோதல். சாதி வெறி அடங்காத மாணவர்களுக்குள் பிரச்சனை. ஒருவன் கையில் கத்தி. இன்னொருவன் கையில் உருட்டுக்கட்டை. வேறொருவன் பேருந்தை கொளுத்துகிறான். மற்றொருவன் தரையில் இரத்த வெள்ளத்தில்…. இவர்கள் நாளைய இந்தியாவின் நான்காவது தூண்கள். ஆம்… நான்காவது தூண்கள் நடு தெருவில் பொறுக்கித்தனம் செய்துகொண்டு.

என்ன செய்யவில்லை… செய்ய வேண்டும்…?
சட்ட கல்லூரிக்குள் சட்டம் தன் கடமையயை செய்யவில்லை. நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்திருக்கிறது அரசு. அடி உதை வாங்கிய மாணவர்கள் ஆஸ்பத்திரியிலும்…. அடி உதை கொடுத்தவர்கள் பத்திரமாக கம்பிக்கு பின்னாலும் இருப்பது போதாது. இவர்களின் சட்ட கல்லூரி சீட்டுக்கள் கிழிக்கப்பட வேண்டும். மற்ற எல்லா கல்லூரிகளிளும் சீட்டு மறுக்கப்பட வேண்டும்.

படிக்காமல்.. வேலை இல்லாமல் தெருவில் பரதேசிகளாக அலைந்தாலும் பரவாயில்லை… நாளைய.. என் சமுதாயத்திற்கு.. இவர்கள் சட்டம் இயற்றத் தேவையில்லை.
அதை டாக்டர் அம்பேத்கர் கூட மன்னிக்க மாட்டார்.

மற்றவை… உங்களுக்காக… எழுதுங்கள்.

~பெ.வெ.

திருமணம் என்கிற “வெட்டி”ங்…

•November 11, 2008 • 1 Comment

வீட்ட கட்டி பாரு… கல்யாணத்த பண்ணிப்பாருனு….
சும்மாவா சொன்னாங்க அந்த காலத்துல.

சரி விடயத்துக்கு வருவோம்.
என் உயிர் நண்பன் ஒருவனின் திருமணம் இரண்டு நாட்களுக்கு முன் சிறப்பாக நடந்தது. ஒரு திருமணத்தில் இன்னின்ன சிக்கல்… சிரமம்.. செலவு.. மகிழ்ச்சி.. பொறுப்பு போன்றவை உள்ளன என்பதை மிக நெருக்கமாக பார்த்து.. அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

எது தேவை.. எவை எல்லாம் தேவை இல்லை.. எது அத்தியாவசியம்.. எது அனாவசியம்… சில (மூட)பழக்கங்கள், சில வழக்கங்கள்… மாறாத சட்டங்கள்… மாற மறுக்கும் மனிதர்கள் என சிலவற்றை இங்கே கோடிட்டு காட்ட விரும்புகிறேன். நான் நாத்திகம் பேசுகிறேன் என்று சிலர் என் கருத்துக்களை மறுக்கக் கூடும். இருந்தாலும்… இங்கே சில….

எவை…. தேவை இல்லை...
1. ஆண்.. பெண்.. அம்மா.. அப்பா.. சொந்தங்கள் நண்பர்கள் என எல்லோரும் இருக்கும் போது.. புரியாத மந்திரங்கள் சொல்லும் புரேகிதர் தேவை இல்லை.
2. மொய்… பொய்… தேவை இல்லை.
3. அம்மி மிதித்து அக்னி சாட்சியாக அருந்ததி பார்க்க தேவை இல்லை.
4. ஆல்பம் போடுகிறேன் பேர்விழி என்று நடுநிசி வரை புகைபடம் எடுத்து தூக்கத்தை கெடுத்துக் கொள்ள தேவை இல்லை.
5. எல்லாரும் வரும் நாளை விட்டு… நல்ல நாள் என காலண்டரில் நாள் பார்த்து… வார நாட்களில் கல்யாணம் தேவை இல்லை.
6. கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு, முன்னால் இருப்பவர் தலையில் மட்டும் அட்சதை போடும் ஆசீர்வாதம் தேவை இல்லை.
7. கடவுள் தூணிலும் துறும்பிலும் இருப்பாரானால்… கல்யாணம் முடித்த கையேடு கோயில் குளம் என அலைச்சல் தேவை இல்லை.

எவை…. தேவை…
1. எல்லாருக்கும் புரியும் படியான தமிழ் வழி ஆசீர்வாதங்கள்.. பேச்சுக்கள்..
2. கல்யாணம் முடித்து அதை பதிவு செய்ய வேண்டும் என்ற நல் எண்ணங்கள்.
3. அலைச்சல் இல்லாத அமைதியான, அப்பா அம்மா தாலி எடுத்து கொடுக்கும்… சீர்திருத்த கல்யாணங்கள்.

சரி… இத்துடன் நான் நிறுத்துகிறேன். மற்றவை நீங்கள் எழுத….

~பெ.வெ.

பூனைகுட்டி ஏன் பெண்குட்டியை விட சிறந்தது?

•June 28, 2008 • 2 Comments

நண்பி ஒருவர் அனுப்பிய மெயிலில் இருந்து சிறு துளிகள் இங்கே.
தமிழாக்கம் மட்டும் தான் என்னுடையது. பத்தே.. பத்து வரிகள்…

1. பூனை குட்டிக்கு.. ரிமோட்னா என்னன்னே தெரியாது.
2. பூனை குட்டி, தான் சாவர வரைக்கும் உன்னை லவ்வடிக்கும்.
3. பூனை குட்டிகிட்ட… நீ லவ்வுடரன்னு சொல்லவே வேணாம்.. அதுக்கே புரியும்.
4. பூனை குட்டி காலைல உன்ன சமைக்க சொல்லாது.
5. பூனை குட்டி பொய் சொல்லாது… சண்டை போடாது.. காரி துப்பாது.
6. பூனை குட்டி தண்ணி அடிக்காது… தம் கட்டாது… கஞ்சா வுட்டுக்காது.
7. பூனை குட்டிகிட்ட நீ அழகாகீரன்னு பொய் சொல்ல வேணாம்.
8. பூனை குட்டி, நாலு நாளைக்கு நீ குளிக்கலன்னாலும் ஒண்ணும் சொல்லாது.
9. பூனை குட்டி, சம்பள கணக்கு கேக்காது.
10. பூனை குட்டிக்கு… அதோட அம்மாவுக்குனு… யாருக்கும்.. எந்த விஷேஷத்துக்கும்…. எந்த பரிசும் வாங்கி தர வேணாம்.

சில பூனை குட்டி படஙகள் மட்டும்..
cat
tiger family

புடுச்சி இருந்தா பிண்ணூட்டம் பண்ணுங்க..

பெ.வெ.

அன்னை என்பவள்…

•May 12, 2008 • 2 Comments

அம்மா தான் எல்லாம்.. மத்ததெல்லாம் சும்மா… அப்படின்னு.. விவேக் ஒரு படத்துல வசனம் பேசுவார். மாதவன் நடித்த ரன் படம்னு நினைக்கிறேன். காமெடிக்காக அந்த வசனம் வைக்கப்பட்டு இருந்தாலும்… 100% உண்மையான சொல் அது.

சென்ற வாரம் பெங்களூர் இன்பென்டரி சாலையில் யாருக்காகவே காத்துக் கொண்டு இருந்தபோது தான் கண்ணில் பட்டது இந்த காட்சி. மனதாலும், உடலாலும், முடியாத தன் மகனை ஒரு வெய்யில் நாளில் தன் முதுகில் சுமக்கும் தாய்..

mother is always a mother... (by peevee@ds)

தாய் மட்டும் அல்ல அவள்..
அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்துக்கள்.